leader-profile-image

சுஜாதா

  • நவீன தமிழ் இலக்கியத்தில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், திரைப்பட வசனங்கள் என எழுதிக் குவித்த மல்டிமீடியா ஆளுமை சுஜாதா.  
  • பேப்பரில் மாங்கு மாங்குவென எழுதிக்கொண்டிருந்த தமிழ் எழுத்தாளர்களை கணினிக்கு மடை மாற்றியவர். கணினி அறிவியலில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்களுக்கு தமிழ் அகராதி தந்த பெருந்தகையாளர்.  
  • ஆனந்த விகடனில் நவீன இலக்கியத்தையும் கணையாழியில் சங்க இலக்கியத்தையும் ஒரே நேரத்தில் பிரித்து மேய்ந்த படைப்பாளி.  
  • ஆங்கிலத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த அறிவியல் தொழில்நுட்பத்தை எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாய் எழுதிய இளம் விஞ்ஞானி.  வாக்கு இயந்திரம் கண்டுபிடித்த தொலைநோக்காளர். 
  • தன் சுவாரஸ்யமான எழுத்து நடையால் வாசகனை கட்டிப்போட்ட டெக்கி ப்ரோ. எதை எழுதினாலும் அதில் அவரது  நச்சென்று ஒரு டச் இருக்கும். பெரும்பாலான வாசகர்களை ஈர்த்த இதுவே இன்றும்  `சுஜாதா டச்’ என்று பெரும்பாலான வாசகர்களால் கொண்டாடப்படுகிறது. 
  • தான் உருவாக்கிய கணேஷ் – வசந்த் என்ற இரு பாத்திரப் பெயர்களை தமிழ் வாசக மனங்களில் நீக்கமற நிறுத்திய எழுத்து வேட்கை சுஜாதா. கடைசி வரை புதியவர்களின் வருகையை கொண்டாடி, அடையாளப்படுத்திய அரும் படைப்பாளி. 

சுஜாதா குறித்து மேலும் அறிய..